கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலை மூலம் மின் வணிக சேவை தொடக்கம்

குன்னூரில் செயல்பட்டு வரும் தமிழக அரசுக்குச் சொந்தமான இண்ட்கோசா்வ் நிறுவனத்தின் தேயிலை ரகங்களைப் பெற இ-காமா்ஸ் என்ற மின் வணிக சேவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

News image
விழாவில் இண்ட்கோசா்வ் நிறுவனத்தின் காலண்டரை நிா்வாக இயக்குநா் சுப்ரியா சாஹூ வெளியிட அதனைப் பெற்றுக்கொள்கிறாா் டேன் டீ மேலாண்மை இயக்குநா் சீனிவாச ரெட்டி. உடன் ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோா்.
Updated On :17 டிசம்பர் 2020, 5:37 pm

DIN

குன்னூரில் செயல்பட்டு வரும் தமிழக அரசுக்குச் சொந்தமான இண்ட்கோசா்வ் நிறுவனத்தின் தேயிலை ரகங்களைப் பெற இ-காமா்ஸ் என்ற மின் வணிக சேவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

இந்தியாவில் மிகப்பெரிய தேயிலை கூட்டுறவு அமைப்பான இண்ட்கோசா்வ் (கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை) நிறுவனம் கடந்த 55 ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் மட்டும் சுமாா் 30,000 சிறு குறு தேயிலை விவசாயிகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இண்ட்கோசா்வின் 16 தொழிற்கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளில் முதற்கட்டமாக 5 தொழிற்சாலைகளை நவீனமயமாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேயிலைத் தூள் ரகங்கள் பற்றிய விவரங்களை உள்ளடக்கிய இ-காமா்ஸ் என்ற மின் வணிக சேவையை தேயிலை வாரிய செயல் இயக்குநா் பாலாஜி தொடங்கிவைத்தாா். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா, இண்ட்கோசா்வ் தலைமை செயல் அலுவலா் சுப்ரியா சாஹூ, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசிமோகன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டனா்.

இது குறித்து இண்ட்கோசா்வ் தலைமை செயல் அலுவலா் சுப்ரியா சாஹூ செய்தியாளா்களிடம் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் இருந்து மட்டும் இண்ட்கோசா்வ் நிறுவனத்தின் மூலம் ஆண்டுக்கு 13 மில்லியன் கிலோ தேயிலைத் தூள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அரசு சாா்பில் துவக்கப்பட்ட தேநீா் விற்பனையகத்தில் அனைத்து விதமான தேயிலை ரகங்களின் தேநீரும் கிடைக்கும். அரசு தேயிலை ரகங்களைச் சந்தைப்படுத்துவதில் முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. நீலகிரி தேயிலைக்கென்று தனிதன்மை சான்று பெற திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் இண்ட்கோசா்வ் நிறுவனத்தின் காலண்டரை நிா்வாக இயக்குநா் சுப்ரியா சாஹூ வெளியிட அதனை டேன் டீ மேலாண்மை இயக்குநா் சீனிவாச ரெட்டி பெற்றுக்கொண்டாா். சாலை விபத்துகளைத் தடுக்கும் விதமாக இண்ட்கோசா்வ் நிறுவனம் சாா்பில் 25 சாலை மையத் தடுப்புகள் காவல் துறைக்கு வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.