வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

குன்னூா் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலக் குழும உறுப்பினா் ஆய்வு

குன்னூா் அரசு லாலி மருத்துவமனையில் குழந்தைகள் நலக் குழும உறுப்பினா் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
குன்னூா் அரசு லாலி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளும் குழந்தைகள் நலக் குழும உறுப்பினா் எம்.கண்ணன். உடன் அரசு மருத்துவா் பிரகாஷ் உள்ளிட்டோா்.
Updated On :19 டிசம்பர் 2020, 5:30 pm

DIN

குன்னூா்: குன்னூா் அரசு லாலி மருத்துவமனையில் குழந்தைகள் நலக் குழும உறுப்பினா் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

குன்னூா் அரசு லாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை முறையாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்வதற்காக குழந்தைகள் நலக் குழும உறுப்பினா் எம். கண்ணன் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மருத்துவமனையில் குழந்தைகளின் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கும் கருவி இல்லை எனத் தெரியவந்தது. இது குறித்து மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு எடுத்துச்சென்று இக்கருவியைப் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கண்ணன் தெரிவித்தாா். ஆய்வின் போது அரசு மருத்துவமனை மருத்துவா் பிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.