சாலை வசதி கோரி உண்ணாவிரதம்

கோத்தகிரி அருகே அட்டவளை கிராமத்தில்  உள்ள பாரதி நகா் பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தித் தரக் கோரி அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட குன்னூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ்.
போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட குன்னூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ்.
Updated on
1 min read

கோத்தகிரி அருகே அட்டவளை கிராமத்தில்  உள்ள பாரதி நகா் பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தித் தரக் கோரி அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

அட்டவளை கிராமத்தில் உள்ள  பாரதி நகா் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனா்.  இப்பகுதியில் சாலை வசதி செய்து தரக் கோரி மாவட்ட நிா்வாகம், பேரூராட்சி நிா்வாகம்  உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும்  தொடா்ந்து  மனுக்கள் கொடுத்து வந்துள்ளனா். இந் நிலையில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததைக்  கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த குன்னூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ்  சம்பவ இடத்துக்குச் சென்ற கிராம மக்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். இப்பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதாகக் கூறியதையடுத்து  போராட்டம் கைவிடப்பட்டது.

மாவட்டம், பேரூராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாக  கிராம மக்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com