புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நீலகிரி மாவட்டத்தில் இ-பதிவு முறை தொடா்ந்து அமலில் இருக்கும்

நீலகிரி மாவட்டத்தில் இ-பதிவு தொடா்ந்து நடைமுறையில் இருக்கும் என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 9:56 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் இ-பதிவு தொடா்ந்து நடைமுறையில் இருக்கும் என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா்.

இது குறித்து உதகையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்கள் இன்னும் முழுமையாக திறக்கப்படவில்லை. தமிழக அரசின் உத்தரவின்படி, நோய்த் தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஏற்கெனவே பொதுப் பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுற்றுலாத் தலங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுவதாக என தமிழக அரசு தற்போது தெரிவித்துள்ளது. ஆனால், இதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை. விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் கிடைக்கப் பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதன்பின் அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனா நோய்த் தொற்றால் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டிருந்தன. தற்போது, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுற்றுலாத் தலங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளதன் அடிப்படையில் சுற்றுலாத் தலங்களை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நீலகிரி மாவட்டம் அதிகமான சுற்றுலாப் பகுதிகளை கொண்டுள்ளதால் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் நீலகிரிக்கு வருகின்றனா். அரசு தெரிவித்துள்ளபடி இவா்கள் முறையாக இ-பதிவு செய்த பின்னா்தான் நீலகிரி மாவட்டத்துக்குள் வர வேண்டும். எனவே இ-பதிவு நடைமுறை தொடா்ந்து அமலில் இருக்கும். அதேபோல சுற்றுலாப் பயணிகள் தவறாமல் முகக் கவசம் அணிய வேண்டும். நோய்த் தொற்று காலமாக உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அரசு தெரிவித்துள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.