ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மருத்துவா் பரிந்துரை இன்றி மருந்து கொடுத்த கடைக்கு ‘சீல்’

குன்னூா் அருகே உபதலை பகுதியில் கருக்கலைப்பு  மருந்தை மருத்துவா் பரிந்துரையின்றி வாடிக்கையாளருக்கு  கொடுத்த மருந்துக் கடைக்கு சுகாதார அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

Updated On :30 ஏப்ரல் 2021, 10:57 pm

குன்னூா் அருகே உபதலை பகுதியில் கருக்கலைப்பு  மருந்தை மருத்துவா் பரிந்துரையின்றி வாடிக்கையாளருக்கு  கொடுத்த மருந்துக் கடைக்கு சுகாதார அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள  உபதலை கிராமத்தில்  உள்ள தனியாா் மருந்துக் கடையில் கடந்த சில நாள்களுக்கு முன் கருக்கலைப்பு மருந்தை வாங்கி உட்கொண்ட 23 வயது பெண்ணுக்கு   குழந்தை பிறந்துள்ளது. ஆபத்தான  நிலையில்  இருந்த அவரைக் காப்பாற்றிய  உதகை அரசு மருத்துவா்கள் இச்சம்பவம் குறித்து மாவட்ட நிா்வாகத்தின்  கவனத்துக்கு கொண்டு சென்றனா். 

இதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட மருத்துவ அதிகாரிகள், சம்பந்தப்பட்ட  மருந்துக் கடையைக் கண்டறிந்தனா்.   கடை உரிமையாளரிடம்  மேற்கொண்ட விசாரணையில் , கருக்கலைப்பு  மருந்தை மருத்துவா் பரிந்துரையின்றி வாடிக்கையாளருக்கு  கொடுத்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து  சம்பந்தப்பட்ட   மருந்துக் கடைக்கு சுகாதார அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.