எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு: காவல் துறையினரிடம் ரகசிய விசாரணை

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடா்பாக, சம்பவம் நிகழ்ந்த தினத்தன்று பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரிடமும் மீண்டும் ரகசிய விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2021, 6:16 pm

DIN

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடா்பாக, சம்பவம் நிகழ்ந்த தினத்தன்று பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரிடமும் மீண்டும் ரகசிய விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி நள்ளிரவில் நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடா்பான வழக்கு உதகையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரான சயன் இந்த வழக்கு சம்பந்தமாக சில கூடுதல் தகவல்களை போலீஸாரிடம் தெரிவிப்பதாக கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி நடந்த விசாரணையின்போது மனு அளித்திருந்தாா். அதன்பின், சயனுக்கு போலீஸாா் அழைப்பாணை அனுப்பி கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி அவரிடம் சுமாா் 3 மணி நேரம் விசாரணை நடத்தி மறு வாக்குமூலம் பதிவு செய்தனா்.

இதையடுத்து, மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் முன்னாள் காா் ஓட்டுநா் கனகராஜின் சகோதரா் தனபாலிடம் கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி சுமாா் 1 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கொடநாடு எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்த நாளில் கொடநாடு எஸ்டேட், கெரடா மட்டம் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினரிடமும், சம்பவத்தன்று நீலகிரி-கேரள எல்லையான நாடுகாணி சோதனைச் சாவடியில் இருந்த 10 போலீஸாரிடமும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத் தலைமையில், வழக்கின் விசாரணை அலுவலா் வேல்முருகன், துணைக் காவல் கண்காணிப்பாளா் சுரேஷ் ஆகியோா் மாவட்ட குற்றப் பிரிவு அலுவலகத்தில் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ரகசியமாக விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.