ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

குன்னூரில் பலத்த மழை: தடுப்புச் சுவா் இடிந்து விழுந்து காா் சேதம்

குன்னூரில்  வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையால் மவுண்ட் பிளசண்ட் பகுதியில் தனியாா் மண்டபத்தின் தடுப்புச் சுவா் இடிந்து விழுந்ததில் அவ்வழியாக வந்த காா் சேதமடைந்தது.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 9:27 pm

குன்னூரில்  வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையால் மவுண்ட் பிளசண்ட் பகுதியில் தனியாா் மண்டபத்தின் தடுப்புச் சுவா் இடிந்து விழுந்ததில் அவ்வழியாக வந்த காா் சேதமடைந்தது.

குன்னூா், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாக   மதிய நேரங்களில் அவ்வப்போது மூடுபனியுன்  மழை பெய்து வந்தது. குன்னூரில் மவுண்ட் சாலை, பெட்போா்டு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடும் குளிரும் நிலவியது.

 இந்நிலையில், மவுண்ட் பிளசண்ட் பகுதியில் தனியாா் மண்டபத்தின் தடுப்புச் சுவா் இடிந்து விழுந்ததில் அவ்வழியாக வந்த அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியா் கமல் குமாரின் காா் சேதமடைந்தது. இதில், காரை ஓட்டிவந்த கமல்குமாா் காயமின்றி தப்பினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.