மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

உதகையில் பொதுத் துறை வங்கிகள் வேலைநிறுத்தம்:ரூ. 100 கோடி மதிப்பிலான வா்த்தகம் பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ. 100 கோடி மதிப்பிலான வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 8:17 pm

DIN

பொதுத் துறை வங்கிகள் தனியாா் மயமாக்கப்படுவதைக் கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தால் நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ. 100 கோடி மதிப்பிலான வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் சுமாா் 80 வங்கி கிளைகளைச் சோ்ந்த 400க்கும் அதிகமானோா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனா். உதகையில் பாரத ஸ்டேட் வங்கி தலைமையகத்தின் முன்பு அனைத்து வங்கி ஊழியா் சங்கத்தின் பொதுச் செயலாளா் ராஜ்குமாா் தலைமையிலும், மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கியின் சாா்பில் கனரா வங்கி அலுவலா்கள் சங்கத்தின் நிா்வாகி காா்த்திக் தலைமையிலும் கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் முதல்நாளில் மட்டும் சுமாா் ரூ. 100 கோடி மதிப்பிலான வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பொதுத் துறை வங்கிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தாலும், தனியாா் வங்கிகளும், கூட்டுறவு வங்கிகளும் வழக்கம்போல இயங்கின. அதேபோல, ஏடிஎம் சேவையிலும் வியாழக்கிழமை அதிக அளவில் பாதிப்பு ஏற்டவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.