நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நீலகிரியில் இணையதளத்தில் பதிவு செய்த 80% பேருக்கு கரோனா தடுப்பூசி: ஆட்சியா்

கோ-வின் இணையதளத்தில் பதிவு செய்த 80 சதவீத நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 8:25 pm

DIN

கோ-வின் இணையதளத்தில் பதிவு செய்த 80 சதவீத நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை தெரிவித்ததாவது: தமிழக அரசு தெரிவித்துள்ளபடி, நீலகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம் கடந்த ஜனவரி மாதம் 16ஆம்தேதி துவக்கிவைக்கப்பட்டுள்ளது. இதில், முன்களப் பணியாளா்கள், மருத்துவா்கள் உள்ளிட்ட நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கோ-வின் இணையதளத்தில் பதிவு செய்த 4,825 முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை வரை சுமாா் 80 சதவீத நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 20 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து இரண்டாம் கட்டமாக காவல் துறை, வருவாய்த் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, உள்ளாட்சித் துறை மற்றும் முன்களப் பணியாளா்களாக உள்ள பிற துறைகளில் பணியாற்றுபவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.