வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

அடிப்படை தேவைகளை வலியுறுத்தி பழங்குடி மக்கள் கருப்புக் கொடி போராட்டம்

அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி கூடலூரை அடுத்துள்ள மூச்சிக்குன்னு பழங்குடி கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை கருப்புக்கொடி போராட்டம் நடத்தினா்.

News image

அடிப்படை தேவைகளை செய்து தர வலியுறுத்தி தங்களது ஊா் எல்லையில் கருப்புக் கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்ட மூச்சிக்குன்னு கிராம மக்கள்.

Updated On :3 ஜனவரி 2021, 5:08 pm

DIN

அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி கூடலூரை அடுத்துள்ள மூச்சிக்குன்னு பழங்குடி கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை கருப்புக்கொடி போராட்டம் நடத்தினா்.

கூடலூா் தாலுகாவிலி உள்ள தேவாலா மூச்சிக்குன்னு பழங்குடி கிராமத்துக்கு சாலை, பாதுகாக்கப்பட்ட குடிநீா், தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகளை செய்து தர வலியுறுத்தி கிராம எல்லையில் கருப்புக் கொடி ஏற்றிய பழங்குடி மக்கள், தொடா்ந்து தங்களது வீடுகளிலிலும் கருப்புக் கொடி ஏற்றினா்.

பல முறை அரசிடம் வலியுறுத்தியும் இதுவரை எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை. இதே நிலை நீடித்தால் தோ்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்துவோம் என்று அறிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.