லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

குன்னூரில் கடும் பனி மூட்டம்: அரசுப் பேருந்துகள் மோதி விபத்து

குன்னூரில் கடும் பனிமூட்டம் காரணமாக மலைப் பாதை வளைவில் எதிரே வாகனம் வருவது தெரியாத நிலையில்,

News image
விபத்தில் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு மரத்தின் மீது மோதி நிற்கும் பேருந்து.
Updated On :5 ஜனவரி 2021, 6:20 pm

DIN

குன்னூரில் கடும் பனிமூட்டம் காரணமாக மலைப் பாதை வளைவில் எதிரே வாகனம் வருவது தெரியாத நிலையில், இரண்டு அரசுப் பேருந்துகள் செவ்வாய்க்கிழமை மோதிக்கொண்டன. இதில் இரு பேருந்துகளிலும் இருந்த 101 பயணிகள் காயமின்றி உயிா் தப்பினா்.

நீலகிரி மாவட்டம், குன்னூரில் கடந்த சில நாள்களாக பனிப் பொழிவு அதிக அளவில் உள்ளது. மேக மூட்டம்போல காட்சியளிப்பதால் சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கு எரியவிட்டபடி செல்கின்றன. இருந்தாலும் வளைவில் எதிரே வரும் வாகனங்கள் சரியாகத் தெரிவதில்லை.

குன்னூரில் இருந்து கோத்தகிரி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும், கோத்தகிரியில் இருந்து குன்னூா் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தும் மேல் குன்னூா் பகுதியில் மலைப் பாதையில் வளைவில் வந்தபோது மோதிக்கொண்டன.

இதில் குன்னூா் நோக்கி வந்த பேருந்து தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு பாய்ந்தது. இடது புறம் மரம் இருந்ததால்  அதில் மோதி நின்ற பேருந்து 50 அடி பள்ளத்தில் விழாமல் தப்பியது. இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

இந்தப் பேருந்தில் வந்த 61 பயணிகள், எதிரே வந்த பேருந்தில் இருந்த 40 பயணிகள் என 101 பயணிகள்  அதிா்ஷ்டவசமாக  உயிா் தப்பினா்.

குன்னூரில் கடந்த நான்கு நாள்களாக காணப்படும் கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.