உதகையில் ஜனவரி 22இல் விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம்

நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம் உதகையில் வரும் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம் உதகையில் வரும் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நீலகிரி மாவட்டத்தில் ஜனவரி 22 ஆம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம் மாவட்ட கூடுதல் ஆட்சியா் அலுவல கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. கரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவெளியைப் பின்பற்றியும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டும் கூட்டம் நடத்தப்படும்.

விவசாயிகள் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை வரும் 13ஆம் தேதிக்குள் தோட்டக்கலை இணை இயக்குநா், தபால் பெட்டி எண் 72, உதகை - 643001 என்ற அலுவலக முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரடியாகவோ அனுப்பி வைக்கலாம்.

இக்கூட்டத்தில் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் மட்டும் ஏற்கப்பட்டு பதில் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com