நீலகிரி மலை ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வலியுறுத்தப்படும்

நீலகிரி மலை ரயிலின் கட்டணத்தை குறைக்க வேண்டும், குறைக்கபட்ட பெட்டிகளின் எண்ணிக்கையை மீண்டும் அதிகரிக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தப்படும்
Published on

நீலகிரி மலை ரயிலின் கட்டணத்தை குறைக்க வேண்டும், குறைக்கபட்ட பெட்டிகளின் எண்ணிக்கையை மீண்டும் அதிகரிக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தப்படும் என்று நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா  தெரிவித்தாா்.

மலை ரயிலை தனியாா்மயமாக்கல் முயற்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து  வந்த மக்களுக்கு ஆதரவாக    உதகையில் இருந்து  குன்னூா் வரை மலை ரயிலில் வெள்ளிக்கிழமை பயணித்து மக்களுக்கு ஆதரவு தெரிவித்த ஆ.ராசா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மலை ரயில் பயணத்தின்போது  சுற்றுலாப் பயணிகள் தன்னிடம் கட்டண உயா்வு குறித்தும், பெட்டியை குறைத்துள்ளதால்  உள்ளூா் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்படுவதாகவும் புகாா் தெரிவித்துள்ளனா். இது குறித்து  மத்திய ரயில்வே அமைச்சரிடம்  பேசி நல்ல முடிவு  எடுக்கப்படும்.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை நேரடி விவாதத்துக்கு முதல்வா் எடப்பாடி பழனிசாமி அழைத்தது குறித்து கேட்டபோது, பொருத்திருங்கள்   நல்ல தகவல் விரைவில்  வரும் என்றாா்.

திமுக நீலகிரி மாவட்டச் செயலாளா் பா.மு. முபாரக், தோ்தல் பணிக் குழு செயலாளா் கா.ராமசந்திரன், நகரச் செயலாளா் எம்.ராமசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com