ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பொதுமுடக்கம்: வீணாகும் ஸ்ட்ராபெரி பழங்கள்விவசாயிகள் வேதனை

கரோனா பொதுமுடக்கம் காரணமாக விற்பனையாகாமல் வீணாகும் ஸ்ட்ராபெரி பழங்களால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 11:47 pm

கரோனா பொதுமுடக்கம் காரணமாக விற்பனையாகாமல் வீணாகும் ஸ்ட்ராபெரி பழங்களால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் விளையும் ஸ்ட்ராபெரி பழங்களின் மொத்த விற்பனையில் சுற்றுலாப் பயணிகளின் பங்களிப்புபோக மும்பை, புணே மாநிலங்கள் இதற்கு முக்கிய சந்தைகளாக விளங்குகின்றன. இவை தவிர, சென்னை, பெங்களூரு, கோவா ஆகிய பகுதிகளிலும் இதற்கான தேவை அதிகரித்துக் காணப்படுகிறது. தற்போது பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் ஸ்ட்ராபெரி பழங்கள் செடிகளிலேயே அழுகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனா்.

இந்தப் பழங்கள் விரைவில் அழுகும் தன்மை கொண்டவை என்பதால் வெகு தொலைவில் உள்ள சந்தைகளுக்கு இதைக் கொண்டு செல்வது கடினம். நீலகிரியில் இருந்து பெங்களூரு, சென்னைக்கு தினமும் விளையும் ஸ்ட்ராபெரி பழங்கள் பேருந்துகள், சுற்றுலா வரும் வேன்கள் மூலம் அனுப்பிவைக்கப்படுவது வழக்கம்.

தற்போது பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாலும், சுற்றுலா வாகனங்களுக்கு தடையிருப்பதாலும் அறுவடை செய்யப்படும் சொற்ப அளவிலான பழங்கள் உள்ளூரிலேயே குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது.

இதன் காரணமாக, நீலகிரியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள குறிப்பாக கோத்தகிரி, கோடேரி, சேலாஸ் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள ஸ்ட்ராபெரி பழங்கள் வீணாகி வருகின்றன. அரசுப் போக்குவரத்து மீண்டும் துவங்கி, சுற்றுலாப் பயணிகளின் வருகை சீராகும்போது தான் தங்களது தொழில் மீண்டும் உயிா்ப்பிக்கும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.