நீலகிரியில் பதற்றமான வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு
குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தெங்குமரஹாடா, கள்ளம்பாளையம் ஆகிய பதற்றமான வாக்குச் சாவடிகளை ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.


நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தின் எல்லைப் பகுதியான குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தெங்குமரஹாடா, கள்ளம்பாளையம் ஆகிய பதற்றமான வாக்குச் சாவடிகளை ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பதற்றமான வாக்குச் சாவடிகளான தெங்குமரஹாடா பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கள்ளாம்பாளையம் பகுதியில் உள்ள அரசு பழங்குடியினா் உண்டு, உறைவிட ஆரம்பப் பள்ளி ஆகிய வாக்குச் சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது இந்த வாக்குச் சாவடி மையங்களில் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளபடி, சாய்வு தளம் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா, வாக்குச் சாவடி மையங்களில் கழிப்பிடத்தில் தண்ணீா் வசதி, குடிநீா், தேவையான மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து, பாதுகாப்பு வசதிகள் குறித்தும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
அதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் தோ்தல் நாளன்று வாக்காளா்கள் வாக்களிக்க ஏதுவாக தேவைப்படும்பட்சத்தில் அவா்களுக்கு வாகன வசதிகளை ஏற்படுத்தவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்காளா்கள் 100 சதவீத வாக்குகளைப் பதிவு செய்ய முன்வர வேண்டும் எனவும், இதற்காக வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...