கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை கிராமத்தில் சிறுத்தை தாக்கியதில் ஆடு வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா ஸ்ரீமதுரை கிராமத்தில் உள்ள களிக்குன்னு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை, அப்பகுதியில் வசிக்கும் அப்து என்பவருக்கு சொந்தமானஆட்டைத் தாக்கிக் கொன்றது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் அப்பகுதியில் ஆய்வு செய்தனா்.