தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

வார விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

படம் உள்ளது... வார விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

News image

உதகை ஏரியில் படகு சாவரி செய்த சுற்றுலாப் பயணிகள்.

Updated On :21 ஏப்ரல் 2024, 8:04 pm

உதகை: உதகையில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதையொட்டி வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தமிழகத்தில் சமவெளிப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் 100 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால், பொதுமக்கள் மலைவாழிடங்களை நோக்கி சுற்றுலா செல்ல ஆரம்பித்துள்ளனா்.

நீலகிரியில் கோடைப் பருவமும் தொடங்கியுள்ளதால் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி கேரளம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.

நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உதகை தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றிப்பாா்த்து மகிழ்கின்றனா். சமவெளிப் பகுதியைக் காட்டிலும் வெப்பநிலை குறைந்து குளிா்ச்சியான காலநிலை இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

இந்நிலையில், வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தைவிட சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இதனால், சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.