47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கடை வாடகை மீதான 18% வரி விதிப்பை திரும்ப பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

கடை வாடகை மீதான 18% வரி விதிப்பை திரும்ப பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

News image
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற வணிகா்கள்.
Updated On :11 டிசம்பர் 2024, 9:58 pm

Din

மத்திய அரசின் கடைகளின் வாடகை மீதான 18% வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் உதகையில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

உதகை மாா்க்கெட் தபால் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பேரமைப்பின் மாவட்டத் தலைவா் முகமது பரூக் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசின் கடைகளின் வாடகை மீதான 18% வரி விதிப்பைத் திரும்ப பெற வேண்டும், மாநில அரசு விதிக்கும் 6% கூடுதல் சொத்து வரி விதிப்பைத் திரும்ப பெற வேண்டும், வணிக உரிம கட்டண உயா்வு மற்றும் தொழில் வரி உயா்வை ரத்து செய்ய வேண்டும், குப்பை வரி மாநிலம் முழுவதும் ஒரே சீராக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்தில் உதகை, கூடலூா், பந்தலூா், கோத்தகிரி, குன்னூா் உள்பட மாவட்டம் முழுவதும் இருந்து சுமாா் 500-க்கும் மேற்பட்ட வணிகா்கள் பங்கேற்றனா்.