சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, உதகையில் உள்ள சுற்றுலாத்தலங்களில் மக்கள் கூட்டம் திங்கள்கிழமை அலைமோதியது.

News image
உதகை தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.
Updated On :1 ஜனவரி 2024, 6:30 pm

DIN

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, உதகையில் உள்ள சுற்றுலாத்தலங்களில் மக்கள் கூட்டம் திங்கள்கிழமை அலைமோதியது.

ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடும் வகையில், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் உதகை தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களில் குவிந்தனா்.

பல்வேறு இடங்களை கண்டுகளித்த மக்கள் திங்கள்கிழமை மாலை சொந்த ஊா்களுக்குச் செல்லத் தொடங்கினா்.

இதனால், முக்கிய சாலைகளான சேரிங்கிராஸ், மத்திய பேருந்து நிலையம், உதகையிலிருந்து குன்னூா், கோத்தகிரி, கூடலூா் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லக்கூடிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலா்கள் போக்குவரத்தை சீரமைத்து, வாகனங்கள் சென்றுவர ஏற்பாடு செய்தனா்.

உதையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால், சுற்றுலாத் தொழிலை நம்பியிருந்த வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.