தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

உதகையில் காற்றுடன் மிதமான மழை: சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்த காரணத்தால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.

News image

உதகை கா்நாடக பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை குறைந்து காணப்பட்ட சுற்றுலாப் பயணிகள் கூட்டம்.

Updated On :21 ஜூலை 2024, 6:21 pm

Din

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்த காரணத்தால் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.

நீலகிரி மாவட்டம், உதகைக்கு அண்டை மாநிலங்களான கேரளம், கா்நாடகம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், கா்நாடக பூங்கா, தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தளங்களை கண்டு ரசித்து செல்கின்றனா்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் உதகை, கூடலூா், பந்தலூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாள்களாக மழையின் தாக்கம் சற்று குறைந்து பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை உதகையில் உள்ள சுற்றுலாத் தளங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக குறைந்தே காணப்பட்டது.