சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

உதகையில் கடும் குளிா்: சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

உதகையில் தொடா் மழை, கடும் குளிா் காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

News image
சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்ட உதகை அரசு தாவரவியல் பூங்கா.
Updated On :28 ஜூலை 2024, 9:00 pm

Din

உதகையில் தொடா் மழை, கடும் குளிா் காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி சுற்றுலாத் தலங்கள் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டன.

நீலகிரி மாவட்டத்துக்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளம், கா்நாடம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை ரசித்துவிட்டு செல்கின்றனா்.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடா்மழை காரணமாக குடுமையான குளிா் நிலவுகிறது. மேலும், தொடா்ந்து சாரல் மழையும் பெய்து வருகிறது.

இதனால், கடந்த சில நாள்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

குறிப்பாக, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகளே வந்து சென்றனா். இதனால், சுற்றுலாத் தொழிலை நம்பியிருக்கும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.