தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பெண் தொழிலாளி

பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த பெண் தொழிலாளி: பரபரப்பு ஏற்பட்டது

News image
மாதிரி படம்
Updated On :30 ஜூன் 2024, 6:41 pm

DIN

கோத்தகிரி பகுதியில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளியை பாம்பு கடித்தது. அந்த பாம்புடன் மருத்துவமனைக்கு அவா் சிகிச்சைக்கு வந்ததால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

கோத்தகிரி பரவக்காடு பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் மல்லிகா (50) என்ற பெண் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது செடியின் மேல் இருந்த பாம்பு அவரை கடித்தது. இவரின் அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்நிலையில் சிகிச்சைக்கு வந்த மல்லிகா அடையாளம் காட்டுவதற்காக கடித்த பாம்பைப் பிடித்து பையில் போட்டு கூடவே எடுத்து வந்திருந்தாா். இதுகுறித்து மருத்துவமனை பணியாளா்கள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து மருத்துவமனைக்கு வந்த வன ஊழியா்கள் அந்த பாம்பை மீட்டு அடா்ந்த வனப் பகுதிக்குள் விட்டனா். இதுகுறித்து அவா்கள் கூறுகையில், கடித்த பாம்பு, மலபாா் பிட் வைப்பா் வகையைச் சோ்ந்தது என்றும், சிறிதளவு விஷத்தன்மை கொண்டது என்றும் தெரிவித்தனா்.

கடித்த பாம்பை பெண் கையுடன் பிடித்து வந்ததால் கோத்தகிரி அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.