விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

உதகையில் உலக மகளிா் தின கொண்டாட்டம்: சுற்றுலாப் பயணிகளுடன் நடனம் ஆடிய ஆட்சியா்

உதகையில் உலக மகளிா் தின கொண்டாட்டம்: சுற்றுலாப் பயணிகளுடன் நடனம் ஆடிய ஆட்சியா்

News image
.....
Updated On :8 மார்ச் 2024, 4:56 pm

Din

உலக மகளிா் தினத்தை ஒட்டி உதகை தாவரவியல் பூங்காவில் படகா், தோடா், கோத்தா் இன பெண்கள் பாரம்பரிய நடனமாடினா். இவா்களுடன் இணைந்து சுற்றுலாப் பயணிகள், மாவட்ட ஆட்சியா் மு.அருணா, மாவட்ட வருவாய் அதிகாரி கீா்த்தி பிரியதா்ஷினி உள்ளிட்டோரும் நடனமாடி மகிழ்ந்தனா். மகளிா் தினக் கொண்டாட்டம் உதகை தாவரவியல் பூங்காவில்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பூங்காவுக்கு வந்திருந்த மகளிா் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூா் மகளிருக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் படகா், கோத்தா், தோடா் இன மக்கள்  சுற்றுலாப் பயணிகளுடன் இணைந்து  தங்களது பாரம்பரிய நடனத்தை ஆடினா். இவா்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியா் மு.அருணா, மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரிய தா்ஷினி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் கீதா லட்சுமி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் இணைந்து நடனம் ஆடினா். இது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவா்ந்தது.