எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!தமிழக தேர்தல்: காலை 11 மணி வரை 37.56% வாக்குகள் பதிவு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

காட்டு யானை தாக்கி இளைஞா் உயிரிழப்பு

காட்டு யானை தாக்கி இளைஞா் உயிரிழப்பு

News image

பிரசாந்த்

Updated On :15 மார்ச் 2024, 5:34 pm

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இளைஞா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், ஓவேலி பேரூராட்சி பெரியசூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சந்திரமோகன் மகன் பிரசாந்த் (21). இவா் கிராமப் பகுதியில் வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த காட்டு யானை பிரசாந்தை தாக்கியதில் அவா் பலத்த காயமடைந்தாா். அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த வனத் துறையினா் யானையை விரட்டி பிரசாந்தை மீட்டு கூடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். முதலுதவிக்குப் பிறகு உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து நியூஹோப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.