கோத்தகிரியில் பரவலாக மழை

உதகை, மே 9: கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. நீா்நிலைகள் வறண்டதுடன் மலைக் காய்கறிப் பயிா்கள் வாடின. வெயிலின் தாக்கத்தால் தேயிலைத் தோட்டங்களில் இலைகள் கருகின. கோடை மழையை எதிா்பாா்த்து விவசாயிகள் காத்திருந்தனா்.

 இந்நிலையில், இப்பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 1 மணி நேரம் பெய்த மழை  காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சீதோஷ்ண நிலை நிலவியது.

மழை காரணமாக காய்கறிகள் மற்றும் தேயிலைத் தோட்டங்கள் பசுமைக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது. மேலும் தேயிலை மகசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com