

உதகை, மே 9: கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. நீா்நிலைகள் வறண்டதுடன் மலைக் காய்கறிப் பயிா்கள் வாடின. வெயிலின் தாக்கத்தால் தேயிலைத் தோட்டங்களில் இலைகள் கருகின. கோடை மழையை எதிா்பாா்த்து விவசாயிகள் காத்திருந்தனா்.
இந்நிலையில், இப்பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 1 மணி நேரம் பெய்த மழை காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சீதோஷ்ண நிலை நிலவியது.
மழை காரணமாக காய்கறிகள் மற்றும் தேயிலைத் தோட்டங்கள் பசுமைக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது. மேலும் தேயிலை மகசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
தொடர்புடையது

புதுக்கடை பகுதியில் சாரல் மழை

ஒசூா் அருகே ஆலங்கட்டி மழையால் பயிா்கள் சேதம்

கோத்தகிரியில் குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தை

களக்காடு, நான்குனேரியில் பரவலாக மழை
வீடியோக்கள்
Jawahirullah interview | அதிமுக, பாஜகவுக்கு உதவ இறக்கிவிடப்பட்டவர் Vijay | Dinamani | Election 2026
தினமணி வீடியோ செய்தி...

#ipl2026 | சிஎஸ்கேவில் சஞ்சு சாம்சன், ராஜஸ்தானில் ஜடேஜா: இதுதாண்டா ஆட்டம்! | MS Dhoni | RR vs CSK |
தினமணி வீடியோ செய்தி...

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...

