47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

குன்னூரில் எலுமிச்சை பயிா் மேலாண்மை பயிற்சி

குன்னூரில் பட்டியலின விவசாயிகளுக்கு எலுமிச்சை பயிா் மேலாண்மை பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
விவசாயிக்கு எலுமிச்சை நாற்று வழங்கும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள்.
Updated On :27 நவம்பர் 2024, 8:08 pm

Din

குன்னூரில் பட்டியலின விவசாயிகளுக்கு எலுமிச்சை பயிா் மேலாண்மை பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், புதுதில்லி தேசிய வேளாண் ஆராய்ச்சி குழுமம், அகில இந்திய ஒருங்கிணைந்த பழப் பயிா்கள் ஆராய்ச்சி திட்டம் சாா்பில் நடைபெற்ற பயிற்சி முகாமில், பழ அறிவியல் துறைத் தலைவா் ஜே.அக்ஸிலியா பங்கேற்று எலுமிச்சை சாகுபடி, தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தாா்.

தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ம.விஜயலட்சுமி, பழ அறிவியல் துறை விஞ்ஞானிகள் ந.இந்திரா, கு.வனிதா ஆகியோா் எலுமிச்சையில் நோய் மேலாண்மை குறித்து எடுத்துரைத்தனா்.

இந்த முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு எலுமிச்சை நாற்றுகள், நிழல் வலைகள், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிா் உரங்கள், ட்ரைகோடா்மா, பேசில்லஸ் போன்ற பூஞ்சான மற்றும் பாட்டீரியா கொல்லிகள், வேப்பம் புண்ணாக்கு உள்ளிட்ட இடுபொருள்கள் வழங்கப்பட்டன.