ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

உதகையில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் கள ஆய்வு

உதகையில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்த ஆட்சியா் லட்சுமி பவ்யே தன்னேரு.
Updated On :17 அக்டோபர் 2024, 12:14 am

Din

உதகையில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழகத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் மாதந்தோறும் ஒரு புதன்கிழமை ஒரு வட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் கள ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, நீலகிரி மாவட்டம், உதகை வேலிவியூ பகுதியில் புதன்கிழமை ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மழையால் பாதிக்கப்படும் பகுதிகளை ஆய்வு செய்த ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, கனமழையின்போது அருகில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கிக்கொள்ள அப்பகுதி மக்களிடம் அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து லவ்டேல் நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருள்களின் இருப்பு குறித்தும், ஸ்டோன் ஹவுஸ் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், மாத்திரைகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

வண்ணாரப்பேட்டையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்த ஆட்சியா், அங்குள்ள குழந்தைகளின் எடை மற்றும் உயரம் ஆகியவற்றை பரிசோதனை செய்து, அந்தக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்து கேட்டறிந்தாா். தொடா்ந்து, காா்டன் மந்து பகுதியிலுள்ள பழங்குடியினா் கிராமத்தில் ஆய்வு செய்தாா்.

சேரிங்கிராஸ் தோடா தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தோடா் கைவினைப் பொருட்கள் விற்பனை மையத்தில் தோடா் மக்களால் தயாரிக்கப்படும் பொருள்களை ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து உதகை வட்டாட்சியா் அலுவலகத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் அரசுத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதன்பின், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட ாட்சியா், அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா்.

முன்னதாக, வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு துறைகளின்கீழ் 24 பயனாளிகளுக்கு ரூ.6.61 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் கௌசிக், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி, சுகாதாரத் துறை இணை இயக்குநா் நாகபுஷ்பராணி, துணை இயக்குநா் வெங்கட்ரமணன், மாவட்ட வழங்கல் அலுவலா் ரவிசந்திரன், உதகை கோட்டாட்சியா் திரு.சதீஷ் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.