ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

குந்தா வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

நீலகிரி குந்தா வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் ரூ.1.49 கோடி மதிப்பீட்டில் நிறைவடைந்த பல்வேறு பணிகள், ரூ.69.12 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
குந்தா வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அரசுத் துறை அலுவலா்கள்.
Updated On :18 செப்டம்பர் 2024, 8:10 pm

Din

நீலகிரி மாவட்டம், குந்தா வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் ரூ.1.49 கோடி மதிப்பீட்டில் நிறைவடைந்த பல்வேறு பணிகள், ரூ.69.12 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நீலகிரி மாவட்டம் அருகே இத்தலாா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு மேற்கொண்டதுடன், அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துகளின் இருப்பு உள்ளிட்டவை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

பின்னா், இத்தலாா் நியாய விலைக் கடை மற்றும் கிளை நூலகத்திலும் ஆய்வு மேற்கொண்டாா். மேலும், இத்தலாா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல்பாடுகள், அதே பகுதியில் ரூ.27 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கிளை நூலக கட்டுமானப் பணிகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தாா்.

உதகை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட எமரால்டு அரசு மருத்துவமனையில் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.46.75 லட்சம் மதிப்பில் முடிவடைந்த பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தாா். இதேபோல பல்வேறு திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை அவா் ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, குந்தா வட்டாட்சியா் அலுவலத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் அரசுத் துறை அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றோா். இதைத் தொடா்ந்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, துறை சாா்ந்த அலுவலா்களிடம் வழங்கி, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா்.

முன்னதாக, குந்தா வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு துறைகள் சாா்பில் 23 பயனாளிகளுக்கு ரூ.1.88 லட்சம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

இதில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) கௌசிக், மாவட்ட வருவாய் அலுவலா் மா.நாராயணன், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி, உதகை வருவாய் கோட்டாட்சியா் மகராஜ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பாலுசாமி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் கல்பனா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.