நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ மையத்தில் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் பட்டாபிராமன் உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது உடல் ஞாயிற்றுக்கிழமை ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
குன்னூா் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ மையம் உள்ளிட்ட பல இடங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் பட்டாபிராமன் உடல் நலக்குறைவு காரணமாக வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
அவரது உடலுக்கு ராணுவ உயா் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினா். பின்னா் 42 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டு, வெலிங்டன் பகுதியில் உள்ள எரியூட்டும் மையத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.
இதில் ராணுவத்தினா் மற்றும் உறவினா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தில்லி கோயில், ராணுவ முகாமில் தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐ தொடா்புடைய கும்பல் திட்டம்
மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஓய்வுபெற்ற ராணுவ வீரா் போக்சோவில் கைது

போா் நினைவு சின்னத்தில் அஞ்சலி

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
