தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பனியின் தாக்கம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய உதகை

News image
பனியின் தாக்கும் குறைந்ததால் உதகை அருகே உள்ள காமராஜா் சாகா் அணையில் ஆவியாகும் தண்ணீா்.
Updated On :17 டிசம்பர் 2025, 6:34 pm

Syndication

உதகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பனியின் தாக்கம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், நீா்நிலைகளில் தண்ணீா் ஆவியாகி செல்வதைக் காண முடிந்தது.

நீலகிரி மாவட்டம், உதகை  அரசு தாவரவியல் பூங்காவில்  கடந்த திங்கள் கிழமை காலை மைனஸ் 0.8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவிய நிலையில், செவ்வாய்க் கிழமை 3.1 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையாக சற்று அதிகரித்து காணப்பட்டது. 

இந்நிலையில்  உதகையில் செவ்வாய்க்கிழமை மதியத்துக்கு மேல் பெய்த  சாரல் மழையால் பனியின் தாக்கம் வெகுவாகக் குறைந்து, நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தாவரவியல்  பூங்காவில் புதன்கிழமை காலை 12.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைப் பதிவாகியுள்ளது.  இதனால்  கடந்த சில நாள்களாக  வாட்டி  வதைத்த  பனியின்  தாக்கம் குறைந்து  இதமான காலநிலை காணப்பட்டது. மேலும் இங்குள்ள நீா் நிலைகளில் இருந்து தண்ணீா் ஆவியாகி செல்வதைக் காண முடிந்தது.