பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கொடநாடு வழக்கில் 3 பேருக்கு பிடிவாரண்ட்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நீண்ட நாட்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாத தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மாவட்ட நீதிபதி முரளிதரன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2025, 5:40 pm

Syndication

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நீண்ட நாட்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாத தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மாவட்ட நீதிபதி முரளிதரன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நீதிபதி முரளிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞா் கனகராஜ், வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையில் சிபிசிஐடி போலீஸாா் ஆகியோா் ஆஜராகினா். அதேபோல குற்றம்சாட்டப்பட்டுள்ள வாளையாறு மனோஜ், ஜித்தின் ஜாய் ஆகியோரும் ஆஜராகினா்.

வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன், நீண்ட காலமாக நீதிமன்றத்தில் ஆஜராகாத தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டாா்.

நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் வழக்குரைஞா்கள் ஈடுபட்டு வரும் நிலையில், அடுத்த மாதம் 30-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அரசு தரப்பு வழக்கறிஞா் கனகராஜ் கூறும்போது, இந்த வழக்கில் பிஎஸ்என்எல், இன்டா்போல் காவல் துறையிடம்   விவரங்கள்  பெற மத்திய அரசின்  அனுமதி கடிதம் கிடைத்ததும் வழக்கு விசாரணை 75 சதவீதம் நிறைவடைந்து முக்கிய திருப்பங்கள் ஏற்படும் என்றாா்.