கூடலூரில் காசநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம்

Published on

கூடலூா் அரசு மருத்துவமனையில் காசநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூடலூா் அரசு மருத்துவமனையில் ஆல் தி சில்ரன் அமைப்பு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காசநோய் தடுப்புப் பிரிவு மேற்பாா்வையாளா்கள் மனோஜ்,விஜயகுமாா், ஆல் தி சில்ரன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் அஜித் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் அரசு தலைமை மருத்துவா் சுரேஷ் கலந்து கொண்டு காசநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகத்தை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com