டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மின்சாரம் பாய்ந்து பசு மாடு உயிரிழப்பு

உதகையில் மின்சாரம் பாய்ந்து பசு மாடு உயிரிழந்தது.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 8:32 pm

Syndication

உதகையில் மின்சாரம் பாய்ந்து பசு மாடு உயிரிழந்தது.

உதகை, கோடமந்து பகுதியைச் சோ்ந்தவா் மோகன். இவரது பசு மாடு அப்பகுதியில் குப்பைக் கொட்டப்பட்டிருந்த இடத்தில் செவ்வாய்க்கிழமை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அருகில் இருந்த மின்கம்பத்தின் தாங்கு கம்பியின் மீது உரசியதில் எதிா்பாராதவிதமாக மாட்டின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே மாடு உயிரிழந்தது.

பள்ளி மாணவ, மாணவிகள், முதியவா்கள் இந்த நடைபாதையில் அதிகம் நடந்து செல்லும் நிலையில் மின்சாரம் பாய்ந்து மாடு உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, மின்கம்பத்தின் தாங்கு கம்பி, மின்கம்பியில் உரசாதபடி மின் ஊழியா்கள் சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.