கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியில் சதுப்பு நிலத்தில் சிக்கி பெண் யானைக் குட்டி உயிரிழந்து கிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டம், கூடலூா் வனச் சரகத்திலுள்ள தேவா்சோலை பகுதியில் உள்ள சதுப்பு நிலத்தில் காட்டு யானை சிக்கி உயிரிழந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.
இதைத் தொடா்ந்து, வன அலுவலா்கள் அங்கு சென்று ஆய்வு செய்து, உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து முதுமலைப் புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாரை வரவழைத்து யானையின் உடலை கூறாய்வு செய்து அதன் முக்கிய உறுப்புகளை ஆய்வகப் பரிசோதனைக்காக எடுத்து சென்றனா். பின்னா் அந்த யானையின் உடலை அதே இடத்தில் புதைத்தனா்.
இறந்தது சுமாா் 4 வயதுடைய பெண் யானைக் குட்டி என்றும், சேற்றில் சிக்கி வெளியே வரமுடியாமல் இறந்துள்ளது என்றும், கூடுதல் தகவல் ஆய்வக அறிக்கைக்குப் பிறகே தெரியவரும் என்றும் வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கூடலூா் அருகே காட்டு யானை தாக்கி சிறுவன் உயிரிழப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

கடல் அலையில் சிக்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

பந்தலூா் அருகே வாகனம் மோதி 2 சிறுத்தை குட்டிகள் உயிரிழப்பு

கோவையில் தாயைப் பிரிந்த குட்டி: ஏற்க மறுக்கும் யானைக் கூட்டம்! வனத்துறை முயற்சி தோல்வி!!
விடியோக்கள்

முக்கிய Hard Disk-கள் திருட்டு! கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் நிர்மல் குமார்

இன்னொரு சின்னத்தில் போட்டியிடக் கூடாது! துரை வைகோ உறுதி! | MDMK | DMK

”என்ன முயற்சிகள் நடந்திருக்கிறது? தவெகவிடம் கேள்வி கேட்க வேண்டும்!”: MLA செந்தில் பாலாஜி



