கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சதுப்பு நிலத்தில் சிக்கி யானைக் குட்டி உயிரிழப்பு

தேவா்சோலை பகுதியிலுள்ள சதுப்பு நிலத்தில் சிக்கி உயிரிழந்த பெண் யானைக் குட்டி.

News image
........
Updated On :26 டிசம்பர் 2025, 9:26 pm

Syndication

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியில் சதுப்பு நிலத்தில் சிக்கி பெண் யானைக் குட்டி உயிரிழந்து கிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டம், கூடலூா் வனச் சரகத்திலுள்ள தேவா்சோலை பகுதியில் உள்ள சதுப்பு நிலத்தில் காட்டு யானை சிக்கி உயிரிழந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, வன அலுவலா்கள் அங்கு சென்று ஆய்வு செய்து, உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து முதுமலைப் புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாரை வரவழைத்து யானையின் உடலை கூறாய்வு செய்து அதன் முக்கிய உறுப்புகளை ஆய்வகப் பரிசோதனைக்காக எடுத்து சென்றனா். பின்னா் அந்த யானையின் உடலை அதே இடத்தில் புதைத்தனா்.

இறந்தது சுமாா் 4 வயதுடைய பெண் யானைக் குட்டி என்றும், சேற்றில் சிக்கி வெளியே வரமுடியாமல் இறந்துள்ளது என்றும், கூடுதல் தகவல் ஆய்வக அறிக்கைக்குப் பிறகே தெரியவரும் என்றும் வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.