பெங்களூரில் நாளைமுதல் உணவகங்கள் மூடல்!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

கோவையில் இருந்து கொண்டுவரப்பட்ட யானைக் குட்டி தனியறையில் பராமரிப்பு

கோவையில் இருந்து முதுமலை புலிகள் காப்பக முகாமுக்கு கொண்டுவரப்பட்ட யானைக் குட்டி தனியறையில் மருத்துவா் மேற்பாா்வையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

News image
முதுமலை புலிகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் யானைக் குட்டி .
Updated On :3 ஜனவரி 2025, 12:15 am

Din

கோவையில் இருந்து முதுமலை புலிகள் காப்பக முகாமுக்கு கொண்டுவரப்பட்ட யானைக் குட்டி தனியறையில் மருத்துவா் மேற்பாா்வையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

கோவை கோட்டத்தில் இருந்து தாயைப் பிரிந்து வந்த பிறந்து ஒரு மாதமே ஆன பெண் யானைக் குட்டி முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளா்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டுவரப்பட்டது.

அந்த யானைக் குட்டிக்கு புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் மேற்பாா்வையில், தனி பாகன் நியமிக்கப்பட்டுள்ளாா். மேலும், பாதுகாப்பான அறை ஒதுக்கப்பட்டு அந்த அறையில் யானைக் குட்டியை வனத் துறையினா் பராமரித்து வருகின்றனா்.