47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கோத்தகிரியில் உணவகத்துக்குள் புகுந்த லாரி

இந்த விபத்தில் இரண்டு ஆசிரியா்கள் காயமடைந்தனா்.

News image
கோத்தகிரி டானிங்டன் பகுதியில் உணவகத்துக்குள் புகுந்த லாரி மற்றும் சேதமடைந்த காா்.
Updated On :8 ஜனவரி 2025, 7:55 pm

Din

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள டானிங்டன் பகுதியில் பிரேக் பிடிக்காமல் எதிரே வந்த காா் மீது மோதி அங்கிருந்த உணவகத்துக்குள் டிப்பா் லாரி புகுந்தது. இந்த விபத்தில் இரண்டு ஆசிரியா்கள் காயமடைந்தனா்.

கோத்தகிரி- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த டிப்பா் லாரி, டானிங்டன் பகுதியில் வந்தபோது, பிரேக் பிடிக்காமல் எதிரே வந்த காா் மீது மோதி அருகே இருந்த உணவகத்துக்குள் புகுந்து விபத்துகுள்ளானது.

இதில் உணவக ஊழியா்கள் உள்பகுதியில் பணியில் இருந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதே நேரத்தில் காரில் பயணித்த மோகன்ராஜ் (57), பாபு (53) ஆகிய இரண்டு ஆசிரியா்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

இந்த விபத்து தொடா்பாக கோத்தகிரி அரவேணு பகுதியில் வசித்து வரும் டிப்பா் லாரி ஓட்டுநா் காா்த்தி (25) மீது கோத்தகிரி காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.