47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சாலையோர சிறு வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம்

கூடலூரில் சாலையோர சிறு வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 ஜனவரி 2025, 11:58 pm

Din

கூடலூரில் சாலையோர சிறு வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூடலூா் நகரில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட சாலை விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்தனா். இந்த விபத்துக்கு நடைபாதை கடைகளும், வாகன நிறுத்தமும்தான் காரணம் என்று கூறி சாலையோரக் கடைகளை அகற்ற போலீஸாா் நடவடிக்கை எடுத்தனா். இதில் பெரும்பாலான கடைகள் அகற்றப்பட்டன. பிரதான சாலையோரத்தில் இருசக்கர வாகனங்கள், காா்கள் நிறுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாலையோர சிறு வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கடைகள் அகற்றப்பட்டதால் பாதிப்படைந்த நடைபாதை வியாபாரிகள், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதை நம்பியுள்ள தங்களுக்கு வியாபாரம் செய்ய வேறு இடம் வழங் வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தினா். கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்துகொண்டனா்.