ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

நீலகிரி: கனமழையால் வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்கள் இன்று மூடல்

நீலகிரியில் தொடா்ந்து கனமழையால், வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கொடநாடு காட்சிமுனையை தவிர மற்ற அனைத்து சுற்றுலாத் தலங்களும் இன்று (மே 28) மூடல்

News image

கோப்புப் படம்

Updated On :28 மே 2025, 4:56 am IST

நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கொடநாடு காட்சிமுனையை தவிர மற்ற அனைத்து சுற்றுலாத் தலங்களும் புதன்கிழமை (மே28) மூடப்படுவதாக மாவட்ட வன அலுவலா் கௌதம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழைப் பெய்து வருகிறது. பல இடங்களில் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்து வருகின்றன. எனவே, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு லேம்ஸ்ராக்,

டால்பின் நோஸ், கேத்தரின் அருவி, தொட்டபெட்டா காட்சிமுனை, எட்டாவது மலை பைன் பாரஸ்ட், சூட்டிங் மட்டம், பைக்காரா அருவி, கேரன்ஹில் சுற்றுலாத்தலம், அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் புதன்கிழமை (மே 28) மூடப்படுகின்றன என தெரிவித்துள்ளாா்.