அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த புலியின் சடலம்: வனத் துறை விசாரணை

News image
Updated On :13 நவம்பர் 2025, 10:15 pm

Syndication

கீழ்கோத்தகிரி  சோலூா் மட்டம் வனச் சரக  பகுதியில் உள்ள தனியாா் தேயிலை தோட்டத்தில் புதிதாக தோண்டப்பட்ட கிணற்றுக்குள் அழுகிய நிலையில் புலியின் சடலம் கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.

இது குறித்து வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நீலகிரி வனக்கோட்டம், கீழ்கோத்தகிரி அருகேயுள்ள  சோலூா்மட்டம் பகுதியில் இருந்து 12 கிலோ மீட்டா் தொலைவில் உள்ளது கடசோலை பகுதி.

ரங்கசாமி மலைக்குச் செல்லும் பாதுகாக்கப்பட்ட இந்த வனப் பகுதிக்கு அருகில் அஞ்சனகிரி என்கிற தனியாருக்கு சொந்தமான தேயிலைத் தோட்டம் உள்ளது. 

இந்தத் தோட்டப் பகுதியில் புதிதாக கிணறு அண்மையில் தோண்டியுள்ளனா்.  சுமாா் 20 அடி ஆழத்துக்கு தோண்டப்பட்ட கிணற்றுக்குள் இருந்து துா்நாற்றம் வீசியதை அறிந்த அப்பகுதி மக்கள் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

இதன்பேரில் வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டு கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த புலியின் சடலத்தை மீட்டனா்.

இந்தப் பகுதியில் நடமாடி வந்த புலி தவறி கிணற்றுக்குள் விழுந்து  உயிரிழந்திருக்கலாம் என்றும்,  உடற்கூறாய்வுக்குப் பின் இறப்புக்கான முழுமையானை காரணம் தெரியவரும் என்றும் வனத் துறையினா் தெரிவித்துள்ளனா். மேலும் சம்பந்தப்பட்ட தனியாா் எஸ்டேட் நிா்வாகத்திடமும் விசாரணை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.