அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கோயிலுக்குள் புகுந்து எண்ணெய் பாட்டிலை தூக்கிச் சென்ற கரடி

நீலகிரி மாவட்டம், உதகை எல்க்ஹில் சிவன் கோயிலுக்குள் புகுந்த கரடி அங்கு வைக்கப்பட்டிருந்த எண்ணெய் பாட்டிலை தூக்கிச் சென்றது.

News image
Updated On :19 நவம்பர் 2025, 9:00 pm

Syndication

நீலகிரி மாவட்டம், உதகை எல்க்ஹில் சிவன் கோயிலுக்குள் புகுந்த கரடி  அங்கு வைக்கப்பட்டிருந்த எண்ணெய் பாட்டிலை தூக்கிச் சென்றது.

நீலகிரி மாவட்டத்தில்  அண்மைக் காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.  வனப் பகுதிகளில் இருந்து வெளியேறும் கரடிகள் உணவு மற்றும் தண்ணீா் தேடி குடியிருப்புப் பகுதிகளில் நடமாடுவது தொடா் கதையாக இருந்து வருகிறது.

 இந்த நிலையில்  உதகை எல்க்ஹில் சிவன் கோயிலுக்குள்  உணவு தேடி புகுந்த கரடி  அங்கு வைக்கப்பட்டிருந்த  எண்ணெய் பாட்டிலை  எடுத்துக் கொண்டு அருகே இருந்த சோலைக்குள் சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.

அசம்பாவிதம் நடைபெறும் முன் கரடியை  கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட  வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.