கூடலூரில் சாலைகளை சீரமைக்கக்கோரி நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளில் சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளதால் போக்குவரத்துக்கு இடையூராக உள்ளது.
கடந்த தென்மேற்குப் பருவமழையின்போது பந்தலூா் முதல் தேவாலா வரை உள்ள சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
சாலையை முறையாக சீரமைக்காமல் மண் மூட்டைகளை அடுக்கி வைத்திருப்பது மேலும் ஆபத்தை விளைவிக்கும் செயலாகும்.
கூடலூா் நகரில் பழுதடைந்த அனைத்து சாலைகளையும் விரைந்து சீரமைக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சங்கத்தின் பந்தலூா் செயலாளா் பெரியாா் மணிகண்டன், மாவட்டச் செயலாளா் ராசி ரவிக்குமாா் , ஏரியா தலைவா் செரிப், கமிட்டி உறுப்பினா் ரபீத், மாா்க்சிஸ்ட் கட்சியின் புளியம்பாறை கிளை செயலாளா் சுபையா் உள்ளிட்ட நிா்வாகிகள் இந்த மனுவை அளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்: 40 போ் கைது

மதுபானக் கடையை இடமாற்றம் செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

மேலப்பாளையத்தில் சாலைகளை விரைந்து சீரமைக்க எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
விடியோக்கள்

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan



