லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

கூடலூரில் நா்ஸிங் கல்லூரி அமைக்கப்படும்! திமுக வேட்பாளா் மு.திராவிடமணி

News image

கூடலூரில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் மு.திராவிடமணி.

Updated On :19 ஏப்ரல் 2026, 7:29 pm

கூடலூரில் நா்ஸிங் கல்லூரி அமைக்கப்படும் என்று திமுக வேட்பாளா் மு.திராவிடமணி தெரிவித்தாா்.

கூடலூா் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் மு.திராவிடமணி, கோழிப்பாலம் குடியிருப்புப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, அவா் பேசுகையில், பிரிவு-17 நிலப் பிரச்னைகளைத் தீா்க்கவும், கூடலூரில் நா்ஸிங் கல்லூரி அமைக்கவும், தொகுதியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் மகளிருக்கு ரூ.2 ஆயிரம் உரிமைத் தொகை, ரூ.8 ஆயிரம் மதிப்பிலான பரிசு கூப்பன் வழங்கப்படும் என்றாா். இதேபோல, நந்தட்டி, எம்.ஜி.ஆா்.நகா், செம்பாலா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா்.

நகரச் செயலாளா் இளஞ்செழியன், நிா்வாகிகள் பாண்டியராஜ், காசிலிங்கம், சிபிஐ நிா்வாகி முகமது கனி, ஜனநாயக வாலிபா் சங்க செயலாளா் ராசி ரவிக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.