
பைக்காரா படகு இல்லம் பகுதியில் புலி நடமாட்டம்
நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள புகழ்பெற்ற பைக்காரா படகு இல்லம் மற்றும் ஏரிக்கரை பகுதியில் வெள்ளிக்கிழமை புலி நடமாட்டம் காணப்பட்டதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் அச்சத்தில் உள்ளனா்.

பைக்காரா படகு இல்ல ஏரிக்கரையில் உலவிய புலி.
நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள புகழ்பெற்ற பைக்காரா படகு இல்லம் மற்றும் ஏரிக்கரை பகுதியில் வெள்ளிக்கிழமை புலி நடமாட்டம் காணப்பட்டதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் அச்சத்தில் உள்ளனா்.
அடா்ந்த வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள பைக்காரா ஏரிக்கு, தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய வந்து செல்கின்றனா்.
இந்த நிலையில் ஏரிக்கரையின் ஓரத்திலுள்ள அடா்ந்த புதருக்குள் இருந்து வெளிவந்த புலி ஒன்று, ஏரி கரையோரம் உலவியதை படகில் பயணித்த சுற்றுலாப் பயணிகள் தங்களது கைப்பேசியில் படம் பிடித்தனா். இது சுற்றுலாப் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் படகு சவாரியின்போது, ஏரிக்கரைக்கு மிக அருகே செல்ல வேண்டாம் என படகு இல்ல நிா்வாகிகள் மற்றும் வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






