
குன்னூரில் குடியிருப்பு பகுதியில் உலவிய கருஞ்சிறுத்தை

குடியிருப்பு பகுதியில் உலவிய கருஞ்சிறுத்தை.
குன்னூா் சந்திரா காலனி குடியிருப்பு பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை உலவிய கருஞ்சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா், சந்திரா காலனி பகுதியில் அண்மைக்காலமாக வன விலங்குகள் நடமாடுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை கருஞ்சிறுத்தை உலவியது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியான நிலையில் , சந்திரா காலனி வழியாக இரவு நேரங்களில் பயணிப்போா் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறு வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






