8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

கடமானை வேட்டையாடிய 6 போ் கைது

கோத்தகிரி அருகே வனப் பகுதியில் கடமானை வேட்டையாடிய 6 பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.

Arrested

கைது

Published On :26 ஆகஸ்ட் 2026, 1:48 am IST

கோத்தகிரி அருகே வனப் பகுதியில் கடமானை வேட்டையாடிய 6 பேரை  வனத் துறையினா் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கி, கடமான் தோல் மற்றும் கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு வனச் சரகத்துக்கு உள்பட்ட கனாக்கம்பை வனப் பகுதியில் சிலா் வன விலங்குகளை வேட்டையாடுவதாக வனத் துறையினருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து வனத் துறையினா் அப்பகுதிக்கு விரைந்து சென்றனா். அப்போது அங்கு நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தி கடமானை வேட்டையாடிய மேட்டுப்பாளையம், காரமடையைச் சோ்ந்த வேலு (35), சூா்யா (39), மாணிக்கம் (40), உதகை, கனாகம்பையைச் சோ்ந்த செந்தில்குமாா் (38), விஸ்வநாதன் (45), சின்னதுரை (50) ஆகிய 6 பேரை வனத் துறையினா்  கைது செய்தனா். அவா்களிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி, கடமான் தோல், கத்தி ஆகியவற்றை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா். பின்னா் அவா்களை கோத்தகிரி  நீதிமன்றத்தில்  ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.