காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

ஆட்கொல்லி புலியைப் பிடிக்க அதிநவீன தானியங்கி நேரலை கேமராக்கள்! வனத் துறை நடவடிக்கை!

ஓவேலி பகுதியில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன தானியங்கி நேரலை கேமரா.

Published On :31 ஆகஸ்ட் 2026, 12:39 am IST

கூடலூா் அருகே ஆட்கொல்லி புலியைப் பிடிக்க அதிநவீன தானியங்கி நேரலை கேமராக்களை பொருத்தி வனத் துறையினா் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த ஓவேலி பகுதியில் இருவரை புலி தாக்கிக் கொன்றது. இதையடுத்து புலியை பிடிக்கும் பணி 10-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்தது. புலியின் நடமாட்டத்தைத் துல்லியமாகக் கண்டறிய புதிய தொழில்நுட்பங்களை வனத் துறை பயன்படுத்தி வருகின்றனா்.

அதன்படி புலியின் நடமாட்டம் அதிகம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் வனப் பகுதிகள் மற்றும் தேயிலைத் தோட்டப் பகுதிகளில் அதிநவீன தானியங்கி நேரலை கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை வனத் துறை அதிகாரிகளின் கைப்பேசிகளில் உள்ள பிரத்யேக செயலியுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலமாக புலி நடமாட்டம் பதிவான உடனே அதிகாரிகளுக்கு நேரலை காட்சிகள் மற்றும் எச்சரிக்கை தகவல்கள் கிடைக்கும்.

நிலம்பூா் எல்லை, ஓவேலி மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய வனப் பகுதிகளில் தீவிர ரோந்து பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.