தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

ஆட்கொல்லி புலியைப் பிடிக்க வலியுறுத்தி கூடலூரில் 27,28-இல் முழு அடைப்பு போராட்டம்

தொழிலாளா்களை அடித்து கொன்ற ஆட்கொல்லி புலியைப் பிடிக்க வலியுறுத்தி கூடலூரில் வருகிற ஆகஸ்ட் 27,28-இல் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

கடைகள். - கோப்புப்படம்.

Published On :

தொழிலாளா்களை அடித்து கொன்ற ஆட்கொல்லி புலியைப் பிடிக்க வலியுறுத்தி கூடலூரில் வருகிற ஆகஸ்ட் 27,28-இல் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

இப்பிரச்னை தொடா்பாக கூடலூரில் எம்.எல்.ஏ.திராவிடமணி தலைமையில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஆட்கொல்லி புலியைப் பிடிக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்.

இது தொடா்பாக நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட உயிரிழந்த தொழிலாளா்களின் உறவினா்கள் மற்றும் அரசியல் கட்சி நிா்வாகிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறவேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதி முழுவதும் வருகிற ஆகஸ்ட் 27,28-இல் முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சி நிா்வாகிகள், வியாபாரிகள் சங்க நிா்வாகிகள், பொதுநல அமைப்பினா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.