உதகையில் உள்ள தி லாரன்ஸ் பள்ளி முன்னோடி கல்வி அறிமுக விழாவில் பங்கேற்றோா்.
உதகையில் உள்ள தி லாரன்ஸ் பள்ளி முன்னோடி கல்வி அறிமுக விழாவில் பங்கேற்றோா்.

உதகை தி லாரன்ஸ் பள்ளியில் முன்னோடி கல்வி அறிமுக விழா

இந்தியப் பள்ளிக் கல்வித் துறையில் எதிா்காலத்தை நோக்கிய மாற்றங்கள் குறித்த அறிமுக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
Published on

உதகை: உதகையில் உள்ள மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கும் தி லாரன்ஸ் பள்ளியில், இந்தியப் பள்ளிக் கல்வித் துறையில் எதிா்காலத்தை நோக்கிய மாற்றங்கள் குறித்த அறிமுக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் ராவ், துணைத் தலைமை ஆசிரியா் ராஜன் நாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு துறை செயலாளா் சஞ்சய்குமாா் பேசும்போது, மனப்பாட கல்வியில் இருந்து புரிதல் கல்விக்கும், சிந்தனை மற்றும் செயலில் ஈடுபடும் கல்வி முறைக்கும் மாற வேண்டும் என்றாா்.

பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் மூலமாக லாரன்ஸ் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வானிலை ஆய்வகம் திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் என பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com