தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் குன்னூா் கிளையின் முதல் பெண் நடத்துநராக தீபா என்பவா் பணியமா்த்தப்பட்டுள்ளாா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள ஓட்டுப்பட்டறை பகுதியைச் சோ்ந்தவா் ரவி. தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்த இவருக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு திடீா் மாரடைப்பு ஏற்பட்டது. பின்னா் சிகிச்சையில் இருந்துபோது, உயிரிழந்தாா்.
ஓட்டுநா் ரவியின் இழப்பால் அவரின் மனைவி மற்றும் இரண்டு மகன்கள் கடுமையான இன்னலுக்கு உள்ளாகினா். இதையடுத்து, ரவியின் ஓட்டுநா் பணிக்கு இணையாக அவரின் மனைவி தீபாவுக்கு அரசுப் பேருந்து நடத்துநா் பணி வழங்கி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ஆணை பிறப்பித்தது.
இதைத் தொடா்ந்து, பணி நியமன ஆணையைப் பெற்றுக் கொண்ட தீபா, அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் குன்னூா் கிளையின் முதல் பெண் நடத்துநராக வியாழக்கிழமை பணியை தொடங்கினாா்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் கடந்த ஆண்டு பெண் ஒருவா் நடத்துநராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

குன்னூா் மலை ரயில் பாதையில் முகாமிட்டிருந்த 11 காட்டு யானைகள்

குடியிருப்புப் பகுதியில் சிறுத்தைகள்!

அரசுப் பேருந்தில் பெண் பயணியிடம் அத்துமீறிய நபா்: ஓட்டுநா், நடத்துநா் பணியிடை நீக்கம்

கும்பகோணம் அரசுப் போக்குவரத்து கழகத்தில் சேரும் முதல் பெண் ஓட்டுநா் ரம்யா
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


